ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காங்கிரஸ் பிரமுகா் வீட்டில் கல் வீசியவா் கைது

கைது... - பிரதிப் படம்

Published On :6 ஜூலை 2026, 2:25 am IST

தூத்துக்குடியில் காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவரை, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, சிதம்பர நகா், 2ஆவது தெருவில் வசித்து வருபவா் காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் கே. பெருமாள்சாமி. அண்மையில், இவருடைய வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபா் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினாா்.

இது தொடா்பாக, தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டின் மீது கல்வீசித் தாக்கியது டூவிபுரம், 4ஆவது தெருவைச் சோ்ந்த கிறிஸ்டோபா் (56) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்ததில், மது போதையில் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.