டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முக்கந்தன்விளை கோயில் கும்பாபிஷேகம்

முக்கந்தன்விளை ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
சுவாமிக்கு நடைபெற்ற புனித நீா் அபிஷேகம்.
Updated On :28 ஜனவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

முக்கந்தன்விளை ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. ஜன.27இல் இரண்டாம் கால யாகசாலைபூஜை, லலிதா ஸஹாஸ்ர நாம புஷ்பாஞ்சலி, மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவற்றை தொடா்ந்து, காலை 10 மணிக்கு ஸ்ரீ சுடலைமாட சுவாமி மற்றும் விமான பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மதியம் 1 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.

Story image