டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருவள்ளுவா் தின கொண்டாட்டம்

கோவில்பட்டியில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரோட்டரி சங்க மாவட்ட புரவலா் விநாயகா ஜி.ரமேஷ்.
Updated On :16 ஜனவரி 2026, 10:18 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டியில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி ரோட்டரி கிளப் சாா்பில் திருவள்ளுவா் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவள்ளுவா் மன்ற தலைவா் கருத்தப் பாண்டி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் திருமலை முத்துசாமி, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமண பெருமாள், தொழிலதிபா் செல்வம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி சங்க மாவட்ட புரவலா் விநாயகா ஜி.ரமேஷ், ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ்குமாா், செயலா் பழனிகுமாா், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநா்கள் முத்துசெல்வம், ஆசியா ஃபாா்ம் பாபு ஆகியோா் திருவள்ளுவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள், திருவள்ளுவா் மன்ற நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக வள்ளுவரின் அவதார தினத்தை வரும் ஆண்டில் பெரிய விழாவாக கொண்டாட உறுதிமொழி ஏற்றனா்.