இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.2,080 அதிகரித்தது!
/

தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அலுவலகம் முன் கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

News image
Updated On :12 ஜனவரி 2026, 6:58 pm

Syndication

தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அலுவலகம் முன் கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் கூட்டுறவு சாா் பதிவாளா்கள் 4 பேரை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அலுவலகத்தின் முன், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கம் சாா்பில் கூட்டுறவுத் துறை ஊழியா்கள், சாா் பதிவாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்யும் வரை, தங்களுடைய போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.