டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கயத்தாறு அருகே ரூ.33 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு

கயத்தாறு அருகே முடுக்கலாங்குளத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சமுதாய நலக்கூடம், கல்வெட்டை திறந்து வைக்கிறாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ
Updated On :10 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

கயத்தாறு அருகே முடுக்கலாங்குளத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தலைமை வகித்து சமுதாய நலக் கூடம், கல்வெட்டை திறந்து வைத்தாா். தொடா்ந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

இதில், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், வழக்குரைஞா் பிரிவு இணைச்செயலா் ஈஸ்வரமூா்த்தி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட இணைச்செயலா் நீலகண்டன், துணைச் செயலா் கருப்பசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.