பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

‘வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு வீடுகட்ட தவணைத் தொகை வேண்டும்’

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு மானியத் தவணைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 13ஆவது வாா்டு உறுப்பினா் ரா.உச்சிமகாளி ராமகிருஷ்ணன் தலைமையில், அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023இல் பெய்த பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்த எங்களுக்கு 2024இல் தமிழக அரசு வீடு கட்ட அரசாணை வழங்கியது.

அதன்படி, எங்கள் பேரூராட்சிப் பகுதிக்கு 49 வீடுகள் வழங்கப்பட்டன. அரசாணையை பெற்ற நாங்கள் கடன் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம். இதில் முதல் தவணைத்தொகையை பெரும் போராட்டத்துக்குப் பின்னரே பெற்றோம்.

அடுத்தக் கட்ட தவணைத்தொகை வராததால் கடந்த டிச.3ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் மனு அளித்தோம். இதுவரை தவணைத்தொகை வராததால் வீடு கட்ட முடியாமலும், குடியிருக்க வீடு இல்லாமலும், வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட இயலாமலும் சிரமத்தில் உள்ளோம்.

எனவே, மீதமுள்ள தவணைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.