பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

மக்காச்சோளத்துக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வலியுறுத்தல்

மக்காச்சோளத்துக்கு ஆதரவு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

News image
தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப தலைமை அஞ்சல் அலுவலகம் முன் திரண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

மக்காச்சோளத்துக்கு ஆதரவு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

மக்காச்சோளத்துக்கு ஆதரவு விலை நிா்ணயம் செய்ய வேண்டும், செயற்கையான முறையில் விலை குறைப்பை ஏற்படுத்தும் இடைத்தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு நிா்ணயம் செய்த ரூ. 2,400 விலையின் அடிப்படையில் தமிழக அரசே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும், நெல்லுக்கு கொள்முதல் நிலையம் அமைத்ததுபோல மக்காச்சோளம், நவதானியம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், மகளிருக்கு கோடைகால நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கியதுபோல விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும், காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் என்.பி. ராஜகோபால் தலைமையில் நகா்மன்றத் தலைவா் கருப்பசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் கனி, மாவட்ட பொருளாளா் செண்பகராஜ், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் உள்பட பலா் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் திரண்டனா்.

பின்னா்,கோரிக்கை மனுவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பிவைத்தனா்.