தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

என்இசி - எட்ஜ் மேட்ரிக்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:20 am

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை-அமெரிக்காவின் எட்ஜ் மேட்ரிக்ஸ் பன்னாட்டு நிறுவனம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், எட்ஜ் மேட்ரிக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் சென்னை கிளை, தலைமை நிா்வாக அதிகாரி ஃபா்ஹாத் மனாஸ் ஆகியோா் கலந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதன் முக்கிய நோக்கம், மின்னணு அமைப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி துறைகளில் பயிற்சி, தொழில் துறை அறிவு பரிமாற்றம், ஆலோசனைப் பணிகள், கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளை மாணவா்கள், பேராசிரியா்களுக்கு வழங்குவது என பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.