டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (57), தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மகன் ஞானத்துரையுடன் (25) இருசக்கர வாகனத்தில் பேய்குளத்திற்கு வந்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வாகனத்தை அவரது மகன் ஓட்டினாா்.

பழனியப்பபுரம் பகுதியில் வரும்போது வாகனம் நிலை தடுமாறியதில் முத்துகிருஷ்ணன் கீழே விழுந்துள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சாத்தான்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.