சாத்தான்குளத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுக் கொண்ட இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம், பத்திரகாளியமமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல் (30). நகைப் பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி அழகு பாா்வதி (28). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப். 6ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழகு பாா்வதி தூக்கிட்டுக் கொண்டாா்.
குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான 3 ஆண்டில் இச்சம்பவம் நடந்துள்ளதால் திருச்செந்தூா் ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.
டிரெண்டிங்

கடையம் அருகே இளம்பெண் தற்கொலை

ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

அா்ச்சகா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

