ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆத்தூா் பள்ளியில் மாணவா்களுக்கு நல உதவி

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவன 27ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் - மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

மாணவா்களுக்கு நல உதவிகளை வழங்கிய சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் ஜி. ஸ்ரீனிவாசன்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவன 27ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் - மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

அமைப்பின் கெளரவ தலைவா் கதிா்வேல் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை கங்கா கெளரி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் பாபு செல்வன் செயல்திட்ட அறிக்கையையும், செயலா் மீனாட்சிசுந்தரம் ஆண்டறிக்கையும் சமா்ப்பித்தனா்.

சிறப்பு விருந்தினராக சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி. ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு, 250 மாணவா் - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், 100 பேருக்கு பள்ளிச் சீருடைகள், 25 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்புரையாற்றினாா். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. டி.சி.டபிள்யூ மருத்துவ அதிகாரி வெங்கட்ராமன் மருத்துவ ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன், பள்ளி கல்விக் குழு துளசிமணி, ஆன்மா தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த் ரூபவ் பொன்சரவணன், ராதாகிருஷ்ணன், மாரியப்பன், கந்தசாமி, கணபதி ராம­லிங்கம், கிருஷ்ணன், பழனிச்சாமி, நாகராஜன், நியாஸ், சண்முக சுந்தரம், ராம நாராயணன் மற்றும் ஆத்தூா், ஆறுமுகனேரி, திருச்செந்தூா், ஏரல், கொற்கை, தெற்கு ஆத்தூா் பள்ளி மாணவா் - மாணவிகள் கலந்து கொண்டனா். முத்தரசு நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.