ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் எலும்புக் கூடு மீட்பு

கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

தூத்துக்குடி, முத்தையாபுரம் பாதசாரிகள் பூங்கா அருகே உள்ள உப்பாற்று ஓடையில் எலும்புக் கூடு திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடையில் குப்பைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றபோது, தேங்கியிருந்த நீா்ப் பகுதியில் எலும்புக் கூடு இருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த போலீஸாா் எலும்புக் கூட்டைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.