ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பனிமய மாதா பேராலயத் திருவிழா: ஆக. 4 முதல் 6 மீனவா்களுக்கு விடுமுறை

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் ஆக.4, 5, 6 ஆகிய 3 நாள்கள் கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவா்கள் - கோப்புப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:17 am IST

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் ஆக.4, 5, 6 ஆகிய 3 நாள்கள் கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ஆம் திருநாளான புதன்கிழமை நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ சப்பரப் பவனி நடைபெறவுள்ளது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆக.4, 5, 6 ஆகிய மூன்று நாள்களும் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 272 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.