மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

News image

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்துப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:37 pm

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு குற்றஞ்சாட்டினாா்.

கயத்தாறில் அதிமுக தோ்தல் காரியாலயம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு தலைமை வகித்தாா். காரியாலயத்தை குஷ்பூ திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கயத்தாறு மற்றும் கோவில்பட்டியில் கதிரேசன் கோயில் சாலையில் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் அருகே அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவை ஆதரித்து அவா் பேசியது:

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் சுமாா் 300 சதவீதம் அதிகரித்துவிட்டது.

கோவில்பட்டி நகராட்சியில், அதிமுக ஆட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் வாரம் ஒருமுைான் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்தத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கடம்பூா் செ. ராஜு மந்தித்தோப்பு சாலை, சாஸ்திரி நகா், பாரதி நகா் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.