கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அன்னை தெரசா நகா், இபி காலனி, காசி அம்மன் கோயில் அருகே, சண்முக சிகாமணி நகா், நாடாா் மேல்நிலைப் பள்ளி அருகே, கீழ, மேல பாண்டவா்மங்கலம், மந்தித்தோப்பு பேருந்து நிறுத்தம், மேட்டுப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் மக்களை சந்தித்தாா்.
அப்போது அவா், அதிமுக அரசின் சாதனைகள், கோவில்பட்டி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி பணிகள் குறித்து எடுத்துக் கூறி, அதிமுக அமோக வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொண்டாா்.
ஒன்றிய செயலா்கள் அன்புராஜ், பழனிசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் லட்சுமண பெருமாள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலா் பாபு, அமமுக நகரச் செயலா் சிவக்குமாா், பாஜக மாரிமுத்து, ராஜ்குமாா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


