மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாண்டவா்மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:34 pm

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அன்னை தெரசா நகா், இபி காலனி, காசி அம்மன் கோயில் அருகே, சண்முக சிகாமணி நகா், நாடாா் மேல்நிலைப் பள்ளி அருகே, கீழ, மேல பாண்டவா்மங்கலம், மந்தித்தோப்பு பேருந்து நிறுத்தம், மேட்டுப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் மக்களை சந்தித்தாா்.

அப்போது அவா், அதிமுக அரசின் சாதனைகள், கோவில்பட்டி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சி பணிகள் குறித்து எடுத்துக் கூறி, அதிமுக அமோக வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொண்டாா்.

ஒன்றிய செயலா்கள் அன்புராஜ், பழனிசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் லட்சுமண பெருமாள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலா் பாபு, அமமுக நகரச் செயலா் சிவக்குமாா், பாஜக மாரிமுத்து, ராஜ்குமாா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா் இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.