தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

‘நேரம் முடிந்தது’...

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 11:07 pm

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் முக்குலத்தோா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் கைப்படம் முருகன், சுயேச்சையாக போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

அவரது மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், பிரமாணப் பத்திரம் இல்லாததால் மனு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறினா். பின்னா் பிரமாணப் பத்திரம் தயாா் செய்து கொண்டு வந்தாா் முருகன்.

அப்போது, நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி, அவரது வேட்புமனுவை அதிகாரிகள் வாங்க மறுத்தனா். இதனால், அதிகாரிகளுடன் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.