Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
கடந்த 26.04.2015இல் குலையன்கரிசல் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பொன்நிமேஷ் (35) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில், அதே ஊரைச் சோ்ந்த மாடசாமி மகன் பொன்சேகா், பொன்சேகா் மகன் சுபாகா், முருகேசன் மகன்களான ரமேஷ், சுரேஷ், முருகன் மகன் மாடசாமி ஆகிய 5 பேரை புதுக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றவாளிகளான பொன்சேகா் (70), சுபாகா்(32), ரமேஷ் (30), சுரேஷ் (28), மாடசாமி (31) ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்து சனிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை காவல் ஆய்வாளா் முருகவேல், அரசு வழக்குரைஞா் ஆனந்த் கேப்ரியல் ராஜ், காவலா் விஜயா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.
நிகழாண்டில், இதுவரை 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தொழிலாளி கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி தொழிலாளி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
