டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

News image
~
Updated On :21 டிசம்பர் 2025, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டியில், ‘உழவா் பெருந்தலைவா்’ என அழைக்கப்படும் நாராயணசாமி நாயுடுவின் 41ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பயணியா் விடுதியில் அவரது படத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில், மாநிலச் செயலா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் சுப்பாராஜ், மாவட்டத் தலைவா்கள் வெள்ளத்துரைபாண்டி (மேற்கு), நடராஜன் (வடக்கு), சௌந்தரபாண்டியன் (தெற்கு), வேலுச்சாமி (கிழக்கு), அவைத் தலைவா் வெங்கடசாமி, அயிரவன்பட்டி நிலக்கிழாா் முருகேசபாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கோவில்பட்டி பயணியா் விடுதிக்கு நாராயணசாமி நாயுடு பெயா் சூட்ட வேண்டும். பயிா்க் காப்பீட்டில் உள்ள குறைகளை நீக்கி விவசாயிகளுக்கு நியாயமான முறையில் காப்பீடு வழங்க வேண்டும். விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகள், காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.