டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

22 மீனவா்களை விடுவிக்க அரசு நடவடிக்கை தேவை

இலங்கைச் சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவா்கள் 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:25 pm

Din

இலங்கைச் சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவா்கள் 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்த இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவா்கள் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கல்பட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அந்தோணி மகாராஜா விசைப்படகில் சென்ற 12 மீனவா்களுக்கு இலங்கை பணத்தில் தலா ரூ. 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மற்றொரு விசைப்படகில் சென்ற 10 மீனவா்களுக்கு செப். 10ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

கல்பட்டி சிறையில் உள்ள 22 மீனவா்களையும் 2 விசைப்படகுகளையும் அபராதம் ஏதும் இல்லாமல் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.