வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

News image
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றோா்
Updated On :21 மே 2024, 7:45 pm

Sasikumar

கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அவரது படத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் கே.டி.பி. அருண்பாண்டியன் தலைமையில் மாவட்டப் பொருளாளா் காா்த்திக் காமராஜ், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலையில் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் காமராஜ் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

மாவட்டச் செயலா் ஜோஷ்வா, மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் ராஜசேகா், மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலா் மரியவினோலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.