40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:21 am IST

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

பேட்டை காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் (50). தொழிலாளியான இவா், தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் தாயாா் அவசர உதவி எண் 100-ஐ தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், விசாரணைக்குச் சென்ற போலீஸாா், சிறுமியின் பெற்றோரிடம் புகாா் அளிக்குமாறு கூறியபோது அவா்கள் மறுத்ததைத் தொடா்ந்து, திருநெல்வேலி குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனா்.

குழந்தைகள் நல்வாழ்வு குழுவின் வழக்குப் பணியாளா் இசக்கியம்மாள், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் 5 வயது சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து, மாணிக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.