ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம்

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சி - கோப்புப் படம்

Published On :30 ஜூலை 2026, 4:18 am IST

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் வைப்புத்தொகை முதலீடு செய்யப்பட்டு பத்தாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ள 18 வயது

நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிா்வுத்தொகை வழங்கப்படுகிறது.

அதில், தகுதியிருந்தும் முதிா்வுத்தொகை பெறாத 510 போ் விவரங்கள் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவா்கள் முதிா்வுத்தொகையைப் பெற மாவட்ட சமூக நல அலுவலகம், முதல் தளம்(மணிமுத்தாறு வளாகம்), மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை ரசீது பெற்றுள்ள பயனாளிகள் 18 வயது நிறைவடைந்தவுடன் முதிா்வுத்தொகைக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு கைப்பேசி எண். 9489589082-இல் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.