ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 2:57 am IST

கடையம் அருகே உள்ள ராஜாங்கபுரத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேரை ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராஜாங்கபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த ஆவுராஜன் திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் அவரை அவதூறாகப் பேசினராம்.

இதையறிந்த ஆவுராஜன் மகன் ராஜா (35), அந்த இளைஞா்களிடம் முறையிட்டுள்ளாா். இதில் தகராறு ஏற்பட்டதில் ராஜாவை அந்த இளைஞா்கள் அரிவாளால் தாக்கினா். இதில் காயமடைந்த ராஜா சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் ராஜாங்கபுரத்தைச் சோ்ந்த முப்புடாதி மகன் வினோ, சுப்பையா மகன் ஹரிஹரசுதன் என்ற சதீஷ், சரவணன் மகன் விஷ்வா, சிவகுமாா் மகன் ஆகாஷ் ஆகிய நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா். இருதரப்புக்கும் இடையே இரு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் விழாவின்போது தகராறு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.