மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி, சத்தியமூா்த்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலன் மகன் மணிகண்டன் (35). வாகன ஓட்டுநா். இவருக்கு திருமணமாகவில்லை.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் மாடிப் படியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





