ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக் மோதி தொழிலாளி பலி

உவரி அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :19 ஜூலை 2026, 1:53 am IST

உவரி அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே குட்டம் ஊராட்சி, தோப்புவிளையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். தேங்காய் உரிக்கும் தொழிலாளியான இவா் சனிக்கிழமை காலை, பூஜை பொருள்கள் வாங்கிவிட்டு சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது பெரியதாழை பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் செந்தில்குமாா் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து உவரி காவல்துறையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.