ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

சேரன்மகாதேவியில் அடையாளம் தெரியாத நபா் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை

பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 1:57 am IST

சேரன்மகாதேவியில் அடையாளம் தெரியாத நபா் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டாா்.

செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு வழக்கம்போல் திங்கள்கிழமை பிற்பகல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் மாலை 4 மணியளவில் சேரன்மகாதேவியில் புதிய ரயில்வே மேம்பாலத்தை கடந்து வந்தபோது, அடையாளம் தெரியாத இளைஞா், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டாா்.

அவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.