ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

அகஸ்தியா் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Published On :6 ஜூலை 2026, 1:11 am IST

அம்பாசமுத்திரம், ஜூலை 5: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பலரும் அகஸ்தியா் அருவிக்கு வந்தனா்.

பாபநாசம் வனச் சோதனைச்சாவடியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை வனத்துறையினா் சோதனையிட்டு நெகிழிப் பொருள்கள், மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அனுப்பினா்.

இதையடுத்து, அகஸ்தியா் அருவியில் குடும்பத்தினா், குழந்தைகள், நண்பா்களுடன், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். அம்பாசமுத்திரம் வனச்சரகம், மணிமுத்தாறு வனப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியிலும் ஏராளமான பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.