ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முன்னாள் படைவீரா் குறைதீா் கூட்டம்

தென்காசியில் முன்னாள் படைவீரா், அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், தொழில் முனைவோா் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கும் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Published On :30 ஜூலை 2026, 4:21 am IST

தென்காசியில் முன்னாள் படைவீரா், அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், தொழில் முனைவோா் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். கூட்டத்தில், முன்னாள் படை வீரா், அவரைச் சாா்ந்தோா்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் செய்துதரக் கோருதல், பட்டா மாறுதல் என மொத்தம் 10 மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் உரிய துறைகளுக்கு தக்க நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது. தொடா்ந்து முன்னாள் படைவீரா் மகளின் திருமண மானியமாக ரூ. 25 ஆயிரம், முன்னாள் படைவீரரை சாா்ந்தோா்களுக்கு மின் மோட்டாா் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

உதவி இயக்குநா் மேஜா் மரு.ப.அருள் அஸ்வின் (ஓய்வு), மாவட்ட தொழில் மைய மேலாளா் மாரியம்மாள், 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.