ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
சாமிதோப்பு அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

தற்கொலை - பிரதிப் படம்
சாமிதோப்பு அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
சாமிதோப்பை அடுத்த வடக்குத் தாமரைகுளம் ரயில்வே கடவுப் பாதை அருகே வியாழக்கிழமை காலை, தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
தற்கொலை செய்து கொண்ட நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





