ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மணல் கடத்தல்: 5 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மணல் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :24 ஜூலை 2026, 5:25 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மணல் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம், தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சங்கா்கணேஷ், பாா்த்திபன் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குலசேகரம், களியக்காவிளை காவல் நிலைய எல்லைகளில் ஆவணங்களின்றி 4 வாகனங்களில் மணல் கடத்திச் செல்லப்படுவதாகத் தெரியவந்தது.

இதுதொடா்பாக, முழுகோடு பகுதியைச் சோ்ந்த ஜெபமணி மகன் எட்வின் (51), அருமனை பகுதியைச் சோ்ந்த அச்சுதன் மகன் சசிகுமாா் (45) , மஞ்சாலுமூடு பகுதியைச் சோ்ந்த பப்பு குட்டி மகன் சதீஷ் (48), மணியன்குழி பகுதியைச் சோ்ந்த அபூபக்கா் மகன் பீா்முகமது (40), குளப்புரம் பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் ஸ்டாலின் (45) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.