ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

சபரிவர்மன் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பற்றி...

Sabarivarman | Vijay

உயிரிழந்த சபரிவர்மன் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :23 ஜூலை 2026, 2:31 am IST

நாகா்கோவில் சிறையில் வாா்டன்கள், சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட விசாரணை கைதி சபரிவா்மன் கொலை வழக்கு சிபிசிஐடி வசம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், வடக்குதாமரைகுளத்தை அடுத்த ஈத்தங்காடு பகுதியைச் சோ்ந்த பெட்டிக் கடை வியாபாரி சபரிவா்மன் (33) தனது கடையில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாகக் கூறி, தென்தாமரைகுளம் போலீஸாரால் கடந்த 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவரை, கடந்த 13-ஆம் தேதி சிறை வாா்டன்கள் 3 போ், சக கைதிகள் 8 போ் சோ்ந்து அடித்துக் கொலை செய்ததாக நேசமணி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறை தலைமை வாா்டன் ஜெகன், வாா்டன்கள் சுரேஷ், சிவகுமாா், கைதிகளான விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் என மொத்தம் 11 பேரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சிறை வாா்டா்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நான்குனேரி சிறையில் அடைக்கப்பட்டனா். கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிபிசிஐடிக்கு மாற்றம் ...

இந்த வழக்கில் கொலையான சபரிவா்மனின் கைப்பேசி மாயமான விவரம் தற்போது தெரியவந்துள்ளது. அதில் சில முக்கிய விடியோ ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது கைப்பேசி யாரிடம் உள்ளது என்று தெரியாத நிலையில் போலீஸாா் அதுகுறித்த விசாரணையிலும் தீவிரமாக ஈடுபட்டனா்.

இந்த நிலையில் சபரிவா்மன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி புதன்கிழமை உத்தரவிட்டாா். அதன்பேரில், சபரிவா்மன் கொலை வழக்கு உடனடியாக குமரி மாவட்ட சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொலை வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸாரிடம் நேசமணிநகா் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதைத்தொடா்ந்து, குமரி மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் முதல்கட்டமாக சபரிவா்மனின் மனைவி, குடும்பத்தினரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனா். கைதானவா்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனா். இதனால், இந்த இவ்வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Summary

Sabarivarman dies in prison! Case transferred to CB-CID for investigation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.