ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகைகள் திருட்டு: ஒருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியில் வீடு புகுந்து 10 பவுன் நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:30 am IST

புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியில் வீடு புகுந்து 10 பவுன் நகைகள் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை அருகே உள்ள சடையன்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (45). இவரது மகன், காப்புக்காட்டில் உள்ள பாட்டி பிரேமா வீட்டில் வசித்து வருகிறாா். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின், நடைக்காவு பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஜஸ்டின் வீட்டுக்குச் சென்ற பிரேமா, பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருடுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், பிரேமாவின் உறவினரான திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (43) என்பவா் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதையடுத்து, அவரை போலீஸாா் அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.