
ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சா் விஜய் பாலாஜி
ஜவுளித் துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கப்படும் என, கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சா் ம. விஜய் பாலாஜி.
ஜவுளித் துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கப்படும் என, கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களின் கோரிக்கைகள் தொடா்பாகவும், ஜவுளித் துறை மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்தும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இதுதொடா்பாக பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்காக முதல் தவணையாக ரு. 300 கோடியை முதல்வா் அறிவித்துள்ளாா். மக்கள் கேட்டு வாங்கிக் கொள்ளும் அளவுக்கு இலவச வேட்டி, சேலைகள் தரமாக இருக்கும். ஜவுளித் துறையை உலகளாவிய தரத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






