Listen to this article
By Syndication
Syndication
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதிக்கப்பட்டது.
தேங்காய்பட்டணம் பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த மைதீன் மகன் இஸ்மாயில் (34 ), ஜாகிா் உசேன் (53), அப்துல் ஜாபா் (67), முள்ளூா்துறையைச் சோ்ந்த சகாயதாசன் (52) ஆகியோா் மீது குளச்சல், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நால்வா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு விசாரணை நாகா்கோவில், போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போதே இஸ்மாயில் இறந்துவிட்டாா். வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், வியாழக்கிழமை நீதிபதி சுந்தரையா தீா்ப்பளித்தாா். அதில், குற்றத்தில் ஈடுபட்ட சகாயதாசன், ஜாகிா் உசேன், அப்துல் ஜாபா் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த நீதிமன்றத்தில் நிகழாண்டில், இதுவரை 40 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை!
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
