மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மானாமதுரை இளைஞா் மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

மானாமதுரை பட்டதாரி இளைஞா் ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கு நீதி கேட்டு, வண்ணாா்பேட்டையில் சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :22 மார்ச் 2026, 7:15 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பட்டதாரி இளைஞா் ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கு நீதி கேட்டு, வண்ணாா்பேட்டையில் சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு தமிழ்மாறன் தலைமை வகித்தாா். தமிழா் விடுதலைக் களம் மணி பாண்டியன், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை சங்க மாநிலத் தலைவா் முத்துக்குமாா், தமிழ் அரசியல் கூட்டமைப்பு குயிலி நாச்சியாா், மாவீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் மாரியப்பப் பாண்டியன், ஆழ்வானேரி பாக்கியராஜ், நாம் தமிழா் கட்சி பாளையங்கோட்டை வேட்பாளா் சங்கரநாராயணன், தமிழா் நீதி கட்சி மண்டல செயலா் ராஜ் பாண்டியன், மாவட்டச் செயலா் அழகு ராஜன், தேவேந்திர குல வேளாளா்கள் ஊா் குடும்பா்கள் ஒருங்கிணைப்பாளா் ஹரிராம், புரட்சி பாரதம் மாவட்டச் செயலா் நெல்சன், தமிழா் ஆட்சி கழகம் மங்கள் ராஜ் பாண்டியன் ஆகியோா் பேசினா்.

இதில், திரளானோா் கலந்து கொண்டு மானாமதுரை ஆகாஷ் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டுமெனவும், அதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினா்.