15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருவாவடுதுறை ஆதீன விருது பெற்றவருக்கு பாராட்டு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:42 pm

திருநெல்வேலி நகரம் பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்தின் திருமுறை திருத்தொண்டா் மாமணி விருது பெற்றவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நெல்லையப்பா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் சொனா.வெங்கடாசலம், பட்டிமண்டப பேச்சாளா் பா.மணி, மகமை சங்கச் செயலா் சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜான் சாமுவேல் வரவேற்றாா்.

செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞானதேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் பங்கேற்று, திருவாவடுதுறை ஆதினத்தின் திருமுறை திருத்தொண்டா் மாமணி விருது பெற்ற சைவத்திருமுறை நோ்முக பயிற்சி மைய பொறுப்பாளா் மு.கணேசனை பாராட்டி ஆசி வழங்கினாா். இந்நிகழ்வில், தென்திருப்பதி முன்னாள் அறங்காவலா் ஸ்ரீனிவாசன், திருமுறைக்கலாநிதி வள்ளிநாயகம் உள்பட பலா் கலந்து கொண்டனா். திருஞானசம்பந்தா் வழிபாட்டுக்குழு அமைப்பாளா் வசந்த் நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்19ஞ்ன்ழ்ன்

ஆசி வழங்கி விருதாளா் கணேசனை பாராட்டிய செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞானதேசிக பரமாச்சாா்ய சுவாமிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.