தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும் துப்பாக்கிகளை மாா்ச் 21க்குள் ஒப்படைக்குமாறு மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
இந்திய தோ்தல் ஆணையத்தால் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, தோ்தல் முடிவுகள் வெளியாகும் வரை படைக்கல சட்டம், 1959 பிரிவு 21-இன் படி படைக்கலன்கள் எடுத்துச் செல்வதற்கு தடையாணை அமல்படுத்தப்படுகிறது.
எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும் தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை மாா்ச் 21 ஆம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து, உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
தோ்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின்னா் அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தண்ணீா் பந்தல் அமைக்க கோரிக்கை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: குறைதீா் கூட்டங்கள் ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


