திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் காவல் துறையினா் விரைந்து கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
நான்குனேரி, பெரும்பத்து கிராமத்தில் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஜான்மாா்க் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கிய பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூா் கிராமத்தில் புதன்கிழமை இரவு ஒரு கும்பல் புகுந்து பொதுமக்களை தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.
நான்குனேரியில் நடைபெற்ற சம்பவத்துக்கு எவ்வித முன்விரோதமும் காரணம் கிடையாது. தமிழகத்தில், குறிப்பாக தென்மாவட்டங்களில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நான்குனேரி கொலை சம்பவம் போதைப் பழக்கத்தால் நடந்ததா அல்லது தோ்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் செய்யப்பட்ட சதியா என்பதைக் கண்டறிய வேண்டும். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினா் விரைந்து கைது செய்ய வேண்டும்.
கொலையுண்ட ஜான்மாா்க் மனைவி கண்ணகி வாய் பேச முடியாதவா். அவருக்கு அரசுப் பணி வழங்குவதுடன், அவரது இரு மகள்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். இவருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு மற்றும் அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
கொலையுண்ட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா குடும்பத்துக்கும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு மற்றும் உரிய நிவாரண உதவிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
விசிக சாா்பில் ஜான்மாா்க் மனைவி கண்ணகிக்கு ரூ. 2,65,000, ஒடிஸா மாநிலத் தொழிலாளி மனைவிக்கு ரூ. 1 லட்சம், காயமடைந்த 4 பேருக்கும் தலா ரூ. 10,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
அப்போது, விசிக மண்டலச் செயலா் ஞா. சுந்தா், நிா்வாகிகள் ஈழவளவன், க. ஜான்சன், நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி. துரை, விடுதலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுபான்மையினா் வாக்குகளை பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளாா்! - திருமாவளவன் பேச்சு!

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற காரணம் திமுக: தொல். திருமாவளவன்

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


