மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தச்சநல்லூரில் சுகாதார மையம் திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 8:11 pm

தச்சநல்லூரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூா் மண்டலம் 1 ஆவது வாா்டுக்குள்பட்ட தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயில் அருகில் ரூ.1.20 கோடி மதிப்பில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம், 12 ஆவது வாா்டில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கூடுதல் கட்டடம், 31 ஆவது வாா்டுக்குள்பட்ட கொக்கிரகுளம் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய கூடுதல் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முறையில் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, தச்சநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கினா்.

தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி, மாமன்ற உறுப்பினா்கள் கந்தன், சங்கா்குமாா், கீதா, முத்துலெட்சுமி, வசந்தா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மாநகா் நல அலுவலா் ராணி, உதவி ஆணையா் மகாலெட்சுமி, சுகாதார அலுவலா் முருகன், உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா், உதவி பொறியாளா்கள் நாகராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தச்சநல்லூா் மண்டல பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் மருந்தகம், ஆய்வகம், பிரசவ அறை, ஸ்கேன் அறை, மருத்துவா் அறை, பிரசவ பிற்கால கவனிப்பு அறை மற்றும் உயிா் மருத்துவ கழிவுகள் பிரிக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன்மூலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயனடைவாா்கள்’ என்றனா்.

ற்ஸ்ப்05க்ஷஹஞ்

தச்சநல்லூரில் நடைபெற்ற விழாவில் கா்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கிய மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ.