
காவல் துறை மோப்ப நாய் மரணம்! 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த சீஸா், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த சீஸா், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது.
இதையடுத்து சீஸரின் சேவையைப் போற்றும் வகையில், காவல்துறை மரபின்படி 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், காவல் அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் சந்திரன், மோப்ப நாய் படைப் பிரிவு காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





