ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாளை.யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

Published On :26 ஜூலை 2026, 3:02 am IST

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

பாளையங்கோட்டையில் உள்ள காந்திஜி தினசரி சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இந்த சந்தையில் புதிய கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து பொருள்களை வைத்துள்ளதாகவும், உரிய அனுமதியின்றி கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினா். மேலும், மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.