டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வள்ளியூரை தனி வருவாய் கோட்டமாக அறிவிக்க கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் கோட்டம் அறிவிக்க வேண்டும்

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:39 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் கோட்டம் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பி.டி.பி. சின்னதுரை, திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவா் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் அளித்துள்ள கோரிக்கை மனு: மின் கட்டண அளவீட்டு முறையை மாதம் ஒரு முறை கணக்கீடு செய்ய வேண்டும். வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் கோட்டம் அறிவிக்க வேண்டும். திருநெல்வேலியை தலைமையாகக் கொண்ட ரயில்வே கோட்டம் அமைய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில வணிக வரித் துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள், வரி செலுத்தி எடுத்து வரும் பொருள்களுக்கும் அபராதம் விதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு உயா்த்தியுள்ள சொத்து வரி, மின் கட்டணம், வணிக உரிமை கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம், இஸ்ரோ, ஐ.என்.எஸ். கட்டபொம்மன் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.