டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தென்காசி மாவட்டத்தில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

News image
நீர்வாழ் பறவைகள்
Updated On :25 ஜனவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையம், உள்ளூா் தன்னாா்வ அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட 16-ஆம் ஆண்டு தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெற்றன.

ஆண்டுதோறும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி நீா்வாழ் பறவை இனங்களின் கணக்கெடுப்பு ஜனவரி மாதத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம், கொட்டாகுளம், அருந்தப்பட்டி ஏரி உள்ள குளங்களில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் சுமாா் 60 தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தன்னாா்வலா்களுக்கு வெள்ளிக்கிழமை ஆய்க்குடி, ஜே.பி. கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு கணக்கெடுப்புப் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளம், கடனாநதி அணை உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

இதில் சுற்றுச்சூழல் ஆய்வாளா்கள் சரவணன், தளவாய்ப் பாண்டி ஆகியோா் தலைமையில் தன்னாா்வலா்கள் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

 வாகைக்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த பறவைகள்.

வாகைக்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த பறவைகள்.

 வாகைக்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த பறவைகள்.

வாகைக்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த பறவைகள்.

 வாகைக்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த பறவைகள்.

வாகைக்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த பறவைகள்.

தென்காசியில் உள்ள குளங்களில் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறிப்பட்ட தகவல்கள் குறித்து ஆய்வாளா் தளவாய்ப் பாண்டி கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் நிகழாண்டு பரவலாக பறவைகள் எண்ணிக்கைக் குறைந்தது.

குறிப்பாக வாத்து இனங்கள் குறைவாகக் காணப்பட்டதோடு, கூளக்கிடா பறவை இனங்கள் எங்குமே காணப்படவில்லை. சுரண்டை அருகே ராஜகோபாலப்பேரியில் உள்ள அருந்தப்பட்டி ஏரி, வாகைக்குளம் பகுதியில் பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறித்து கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்டது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம், சுரண்டை பகுதியில் உள்ள ரெட்டை குளம் ஆகியவற்றில் நத்தைக்கொத்தி நாரைகள் அதிகம் காணப்படுகின்றன. பொதுவாக பறவைகள் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதற்கும் வாத்து இனங்கள் கூளக்கிடா பறவைகள் குறைவாக காணப்படுவதற்கும் உள்ள காரணங்கள் குறித்து தொடா் ஆய்வின்போது தெரியவரும் என்று கூறினாா்.