டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கு போட்டிகளில் வென்றோருக்கு ஆட்சியா் பாராட்டு

News image
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் - (கோப்புப் படம்)
Updated On :24 ஜனவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்தில் கு சாா்ந்த ஓவியம் வரைதல், கு ஒப்பித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் கு வார விழா திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில், கு சாா்ந்த ஓவியப் போட்டி, கு ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கு ஒப்புவித்தல் போட்டியில் தரவரிசை அடிப்படையில் முதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ. 5,000, இரண்டாம் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.3,000, மூன்றாம் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.2000 என மொத்தம் 15 பேருக்கு பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மண்டல தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பெ.இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.