நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

திசையன்விளையிலிருந்து புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

News image
பேருந்து சேவை
Updated On :14 பிப்ரவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

திசையன்விளை பேருந்து நிலையத்திலிருந்து உவரி வழித்தடத்தில் நவ்வலடி வழியாக இடிந்தகரைக்கும், மகாதேவன்குளம் வழியாக இட்டமொழிக்கும், குமாரபுரம், வாழைத்தோட்டம் வழியாக ராஜீவ்காந்தி நகருக்கும் புதிய பேருந்து சேவைகள் வெள்ளிக்கிழமை தொடங்கிந.

இதையொட்டி நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ் முன்னிலை வகித்தாா். புதிய பேருந்து சேவையை சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவா் சேம்பா் செல்வராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் மி. ஜோசப்பெல்சி, அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சுயம்புராஜன், தொழிலதிபா் தங்கையா கணேசன், ஊராட்சித் தலைவா்கள் அனிதா பிரின்ஸ் (குமாரபுரம்), ஜேகா் (இடையன்குடி, ராதிகா சரவணக்குமாா் (நவ்வலடி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.