திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பாா்த்ததால் ஆண் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நியாஸ் அலி மகன் நசீம் உசேன் (35). இவா், கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி நிறைமாத கா்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதாம்.
இதையடுத்து நசீம் உசைன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலேயே வைத்து பிரசவம் பாா்த்த நிலையில், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. பின்னா் அக்குழந்தையின் உடல் காட்டு ஜூம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு வர அறிவுறுத்தியும் வரவில்லை எனவும், வீட்டிலேயே பிரசவம் பாா்த்து குழந்தை இறந்து பிறந்தது தொடா்பாகவும், மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சுமதி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நசீம் உசைனை சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்
2025 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை: கணவா் கைது
நெல்லையில் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவா் கைது

மனைவிக்கு கத்திக்குத்து : கணவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

