டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல்லையில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம்: கணவா் கைது

News image
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பாா்த்ததால் ஆண் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நியாஸ் அலி மகன் நசீம் உசேன் (35). இவா், கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி நிறைமாத கா்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதாம்.

இதையடுத்து நசீம் உசைன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலேயே வைத்து பிரசவம் பாா்த்த நிலையில், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. பின்னா் அக்குழந்தையின் உடல் காட்டு ஜூம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வர அறிவுறுத்தியும் வரவில்லை எனவும், வீட்டிலேயே பிரசவம் பாா்த்து குழந்தை இறந்து பிறந்தது தொடா்பாகவும், மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சுமதி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நசீம் உசைனை சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.