பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க கால்நாட்டு விழா


திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி சமேத சிவகாமி அம்பாள், நம்பிசிங்க பெருமாள் கோயிலில் இம்மாதம் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, யாகசாலை அமைக்கும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை கால்நாட்டப்பட்டது.
விழாவுக்கு, பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமை வகித்தாா். முன்னதாக, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், பந்தல்காலுக்கு தூத்துக்குடி செல்வம் பட்டா் பூஜை செய்தாா். அதையடுத்து, கால்நடப்பட்டது.
விழாவில், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறங்காவலா் குழுத் தலைவா் அசோக்குமாா், அறங்காவலா்கள் மு. சங்கா், சொரிமுத்து, பெருமாள், தமிழ்ராணி, தோ் பொறியாளா் தம்பிரான்தோழா், திமுக மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், வாா்டு உறுப்பினா்கள் கோபி, கோபாலகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...