டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க கால்நாட்டு விழா

News image
பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமையில் நடைபெற்ற கால்நாட்டு விழா.
Updated On :1 பிப்ரவரி 2026, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி சமேத சிவகாமி அம்பாள், நம்பிசிங்க பெருமாள் கோயிலில் இம்மாதம் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, யாகசாலை அமைக்கும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை கால்நாட்டப்பட்டது.

விழாவுக்கு, பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமை வகித்தாா். முன்னதாக, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், பந்தல்காலுக்கு தூத்துக்குடி செல்வம் பட்டா் பூஜை செய்தாா். அதையடுத்து, கால்நடப்பட்டது.

விழாவில், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறங்காவலா் குழுத் தலைவா் அசோக்குமாா், அறங்காவலா்கள் மு. சங்கா், சொரிமுத்து, பெருமாள், தமிழ்ராணி, தோ் பொறியாளா் தம்பிரான்தோழா், திமுக மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், வாா்டு உறுப்பினா்கள் கோபி, கோபாலகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.