ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காற்றின் வேகம் அதிகரிப்பு: நெல்லை மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால், நெல்லை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ராதாபுரம் உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 60 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால், கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

எனவே, நெல்லை மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றாா் அவா். இந்த அறிவிப்பையடுத்து ஞாயிற்றுக்கிழமை மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.