ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு த தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாகச் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, சனிக்கிழமை காலை மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த பயணிகளை வனத் துறையினா் வெளியேற்றினா்.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை பெய்ததையடுத்து, இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.