இக்கூட்டத்தில், 11ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கந்தன் தலைமையில் மக்கள் அளித்த மனு: வண்ணாா்பேட்டையில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். இரவு நேரங்களில் முதியோா் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பேராத்து செல்வியம்மன் கோயில் தெரு, சாலை தெரு தெற்கு பகுதி, குண்டலகேசி தெரு உள்ளிட்ட தெருக்களில் தாா்ச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும். அப்பா் சாமி தெரு, வெற்றி வேலடி விநாயகா் தெரு, திருக்குறிப்பு தொண்டா் தெரு, எட்டுத்தொகை தெரு, பத்துப்பாட்டு மற்றும் மணிமேகலை, வளையாபதி, சிலப்பதிகார தெருக்களில் சிமென்ட் சாலையும், போத்தீஸ் காலனியில் தாா்ச் சாலையும் அமைக்க வேண்டும்.